/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பயணியர் நிழற்குடை கிராம மக்கள் கோரிக்கை
/
பயணியர் நிழற்குடை கிராம மக்கள் கோரிக்கை
ADDED : ஜூன் 16, 2024 06:17 AM
பெண்ணாடம்: நந்திமங்கலம் பஸ் நிறுத்தத்தில் புதிதாக பயணியர் நிழற்குடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்ணாடம் அடுத்த நந்திமங்கலம் பஸ் நிறுத்தம் நிழற்குடையைப் பயன்படுத்தி நந்திமங்கலம், வடகரை, அருகேரி உள்ளிட்ட கிராம மக்கள் பெண்ணாடம், திட்டக்குடி, விருத்தாசலம் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். பஸ் நிறுத்தத்தில் உள்ள நிழற்குடை பராமரிப்பின்றி விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், கிராம மக்கள் பயணியர் நிழற்குடையை பயன்படுத்த முடியாமல் திறந்தவெளியில் காத்திருந்து பஸ் ஏறும் அவலம் உள்ளது. இதனால் சிறுவர்கள், பெண்கள், முதியோர்கள் அவதியடைகின்றனர்.
எனவே, நந்திமங்கலம் பஸ் நிறுத்தத்தில் ஆபத்தான நிலையில் உள்ள நிழற்குடையை இடித்து அகற்றி, புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.