/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்
/
காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்
ADDED : ஜூலை 21, 2024 06:22 AM

விருத்தாசலம்; விருத்தாசலம் அருகே ஊராட்சி அலுவலகம் முன்பு, காலி குடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மங்கலம்பேட்டை அடுத்த எம்.அகரம் ஊராட்சியில் உள்ள, புதுகாலனி மற்றும் பழைய காலனி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, பல ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை இருந்து வந்தது. மேலும், கடந்த 5 மாதங்களாக இரண்டு நாளைக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், எவ்வித பயனும் இல்லை.
இதில், ஆத்திமடைந்த அப்பகுதி பெண்கள் நேற்று காலை 10:00 மணியளவில் காலி குடங்களுடன், ஊராட்சி அலுவலம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த மங்கலம்பேட்டை போலீசார் மற்றும் துணை பி.டி.ஓ., விஜயகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், அதிகாரிகளிடம் கூறி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.