sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வீடு புகுந்து 19 சவரன் நகை திருட்டு ராமநத்தம் அருகே துணிகரம்

/

வீடு புகுந்து 19 சவரன் நகை திருட்டு ராமநத்தம் அருகே துணிகரம்

வீடு புகுந்து 19 சவரன் நகை திருட்டு ராமநத்தம் அருகே துணிகரம்

வீடு புகுந்து 19 சவரன் நகை திருட்டு ராமநத்தம் அருகே துணிகரம்


ADDED : செப் 23, 2025 07:25 AM

Google News

ADDED : செப் 23, 2025 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநத்தம் : ராமநத்தம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து, 19 சவரன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலுார் மாவட்டம், ராமநத்தம் அடுத்த வெங்கனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன்.

இவரது மனைவி ராஜேஸ்வரி, 32; ஜெகநாதன் வெளிநாட்டில் வேலை செய்யும் நிலையில், வெங்கனுார் கிராமம் அண்ணா நகரில் கூரை வீட்டில் ராஜேஸ்வரி தனது குழந்தை களுடன் வசிக்கிறார்.

இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு மேற்கு தெருவில் புதிதாக கட்டப்படும் வீட்டில் சென்று தங்கினார்.

நேற்று காலை 6:00 மணிக்கு கூரை வீட்டிற்கு வந்த ராஜேஸ்வரி, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது, 2 செயின்கள், 2 பிரேஸ்லெட், நெக்லஸ், மோதிரம், கொலுசு என, 19 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது.

தகவலறிந்த திட்டக்குடி டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமையில் ராமநத்தம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) இளஞ்செழியன், சிறுபாக்கம் சப் இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

தடயவியல் நிபுணர் டி.எஸ்.பி., � தர் தடயங்களை சேகரித்தார். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.

ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us