sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுார் பஸ் நிலையத்திற்கு மாற்று இடம்... தேர்வு; பாதிரிக்குப்பத்தில் அமைக்க ஆலோசனை

/

கடலுார் பஸ் நிலையத்திற்கு மாற்று இடம்... தேர்வு; பாதிரிக்குப்பத்தில் அமைக்க ஆலோசனை

கடலுார் பஸ் நிலையத்திற்கு மாற்று இடம்... தேர்வு; பாதிரிக்குப்பத்தில் அமைக்க ஆலோசனை

கடலுார் பஸ் நிலையத்திற்கு மாற்று இடம்... தேர்வு; பாதிரிக்குப்பத்தில் அமைக்க ஆலோசனை


ADDED : ஜன 08, 2025 05:43 AM

Google News

ADDED : ஜன 08, 2025 05:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் கேப்பர்மலை எம்.புதுாரில் புதிய பஸ் நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்திற்கு பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், பாதிரிக்குப்பத்தில் அமைக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தி.மு.க., அரசு பதவியேற்ற பிறகு, நகராட்சியாக இருந்த கடலுார், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இம் மாநகராட்சியின் மொத்த பரப்பளவு 27.69 சதுர கி.மீட்டராகும். அதற்கேற்ப மக்கள் தொகையும் அதிகம். மக்கள் புழக்கம் அதிகம் உள்ள நிலையில், பஸ் நிலையம் 3.55 ஏக்கரில் 50 பஸ் நிறுத்தும் அளவிற்கு 'ஏ' வகுப்பு தரத்தில் இயங்கி வருகிறது.

கடலுார் நகரம், புதுச்சேரி மாநிலத்தையொட்டி அமைந்துள்ளதால் சராசரியாக தினமும் 60 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். பஸ் நிலையத்திற்குள் நாளொன்றுக்கு 650 பஸ்கள் வந்து செல்கின்றன. பஸ் நிலையம் அருகே வணிக நிறுவனங்கள், ரயில் நிலையம்அமைந்திருப்பதால் பஸ்கள் உள்ளே செல்வதற்கும், வெளியே செல்வதற்கும் கடினமாகும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

இதையடுத்து, பஸ் நிலையத்தை வேறு இடத்தில் நவீன வசதிகளுடன் விஸ்தாரமாக மாற்றி அமைக்க அரசு முடிவு செய்தது. அதற்காக வல்லுனர்கள் குழு அமைக்கப்பட்டு இடம் தேர்வு நடந்தது. அந்த குழுவினர், கடலுார் கரும்பு ஆராய்ச்சி பண்ணை, பாதிரிக்குப்பம், குமாரப்பேட்டை, எம்.புதுார், ஆகிய பகுதிகளில் பஸ் நிலையம் அமைத்தால் பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும் என, ஆலோசனை தெரிவித்தனர்.

மத்திய சிறைச்சாலை அருகே எம்.புதுார் பகுதியில் பஸ் நிலையம் அமைக்கலாம் என்கிற கருத்து மேலோங்கியது. அதையடுத்து, கடலுார் அருகே அரிசிபெரியாங்குப்பம் கிராமத்தில், 110 ஏக்கர் அரசு புறம்போக்கு இடத்தில், புதிய நவீன பஸ் நிலையம் அமைக்க, கடலுார் மாநகராட்சிக்கு நில உரிமம் மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது.

இதற்கு பொதுமக்கள், வணிகர் சங்கங்கள், அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அ.தி.மு.க., உள்பட பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்தினர்.

அதையடுத்து, புதிய பஸ் நிலையம் அமைப்பது தொடர்பாக மாநகராட்சி மேயர் தலைமையில் ஆர்.டி.ஓ., மாநகராட்சி கமிஷனர், எஸ்.பி., ஆகியோர் முன்னிலையில் கருத்து கேட்பு கூட்டம் 21.7.2022ல் நடத்தப்பட்டது. அப்போது, கடலுாரில் இருந்து அரிசிபெரியாங்குப்பம் இடம் 6.8 கி.மீ,., இருப்பதால் கடலுார் நகரத்தையொட்டி பஸ் நிலையம் அமைக்க வியாபாரிகள் உள்ளிட்ட அனைவரும் கோரிக்கை வைத்தனர். இருந்தும், எம்.புதுாரில் பஸ் நிலையம் அமைக்க துவங்கிய ஆயத்த பணிகள் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், எம்.புதுாருக்கு பதில், கடலுார் திருவந்திபுரம் செல்லும் சாலை அருகே பாதிரிக்குப்பத்தில் பஸ் நிலையம் அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. அங்குள்ள பெருமாள் கோவில் இடத்தை இரண்டு இடங்களில் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த இடத்திற்காக அரசு 2.15 கோடி ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளது. இந்த தொகையை அரசிடமிருந்து மானியமாகவோ, அல்லது மாநகராட்சி அபிவிருத்தி கட்டணத்தில் இருந்து செலுத்துவதற்கு உரிய அனுமதி வழங்க, நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு கோப்பு, கடலுார் மாநகராட்சி சார்பில் அனுப்ப உள்ளது. அதற்கான அனுமதி கிடைத்தவுடன் இடம் கையகப்படுத்தப்படும் என, தெரிகிறது.






      Dinamalar
      Follow us