sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

/

சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு


ADDED : செப் 14, 2025 08:13 AM

Google News

ADDED : செப் 14, 2025 08:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுாரில் நடந்த முதல்வர் கோப்பை போட்டியில் கடலுார், துறைமுகம் சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டி, கடலுார், தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்தது.

இதில் கடலுார் துறைமுகம் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் கோபி, விஷ்ணு முதல் பரிசு வென்றனர். இதன் மூலம் மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த குறுவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டியில் முதலிடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். 10ம் வகுப்பு மாணவி தீபிகா, கல்வித்துறை சார்பில் நடந்த குறுவட்ட அளவிலான வட்டு எறிதல் போட்டியில் வெற்றி பெற்று, மாவட்ட அளவிலான போட்டியில் இரண்டாமிடம் பிடித்தார். இதன் மூலம் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார்.

விளையாட்டுப்போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களை பள்ளி சேர்மன் சிவக்குமார், செயல் நிர்வாக அலுவலர் லட்சுமி சிவக்குமார் பாராட்டினர். பள்ளி முதல்வர் உதயகுமார் சாம், ஒருங்கிணைப்பாளர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us