sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுாரில் நாளை விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

/

கடலுாரில் நாளை விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

கடலுாரில் நாளை விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்

கடலுாரில் நாளை விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்


ADDED : மே 29, 2025 03:29 AM

Google News

ADDED : மே 29, 2025 03:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மாவட்ட விவசாயிகள் குறைக்கேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நாளை (30ம் தேதி) நடக்கிறது

கடலுார் மாவட்ட நிர்வாகம் சார்பில் மே மாத விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் நாளை (30ம் தேதி) கலெக்டர் அலுவலகம் பொதுமக்கள் குறைதீர்வு கூட்ட அரங்கத்தில் காலை 10.30 மணிக்கு நடக்கிறது. கூட்டத்தில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.

கூட்டத்தில் பங்கேற்கும் மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், வேளாண்மை சார்ந்த குறைகள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைகள் கோரிக்கைகளாக வைக்கலாம். கோரிக்கைகளை தெரிவிக்க விருப்பம் உள்ள விவசாயிகள், சிட்டா, அடங்கல், கிசான் கடன் அட்டையுடன் அன்று காலை 8 மணிக்கு கூட்ட அரங்கில் தங்களது பெயர் மற்றும் கோரிக்கைகளை முன்பாக பதிவு செய்ய வேண்டும்.

விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம். விவசாயிகள் கோரிக்கைகளுக்கு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் பதில் வழங்கப்படும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us