ADDED : மே 20, 2025 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்,: விருத்தாசலம் அருகே காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி, தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.
விருத்தாசலம் அடுத்த சித்தேரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுநாதன், 43; இவரது மகள் மாலினி, 19. இவர் விருத்தாசலம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில், தையல் பயிற்சி பெற்று வந்தார்.
கடந்த 16ம் தேதி தையல் பயிற்சிக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்ற மாலினி மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து ரகுநாதன் அளித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் நேற்று வழக்குப் பதிந்து, மாலினியை தேடி வருகின்றனர்.