sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நண்பருக்கு பீர்பாட்டில் குத்து; விருதையில் 2 பேர் வெறிச்செயல்

/

நண்பருக்கு பீர்பாட்டில் குத்து; விருதையில் 2 பேர் வெறிச்செயல்

நண்பருக்கு பீர்பாட்டில் குத்து; விருதையில் 2 பேர் வெறிச்செயல்

நண்பருக்கு பீர்பாட்டில் குத்து; விருதையில் 2 பேர் வெறிச்செயல்


ADDED : செப் 12, 2025 07:58 AM

Google News

ADDED : செப் 12, 2025 07:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்,; விருத்தாசலத்தில் மதுபோதையில் நண்பரை பீர்பாட்டிலால் குத்திய வாலிபர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், கம்மாபுரம் அடுத்த கோபாலபுரம் மனோகர் மகன் வீரசேகர், 18; விருத்தாசலம் புதுப்பேட்டை மாரியம்மன் கோவில் தெரு செந்தில்குமார் மகன் முருகன், 18; நண்பர்களான இருவரும் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு மதுஅருந்தியபோது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

தகவலறிந்த முருகன் தாய் லட்சுமி, அவரது மாமன் கிருஷ்ணகுமார், 31; ஆகியோர் தகராறை விலக்கி விட்டதுடன், இனிமேல் முருகனை தேடி வரக்கூடாது என வீரசேகரனை எச்சரித்து அ னுப்பினர்.

ஆனால், சிறிது நேரத்தில் முருகனை தேடி வீரசேகர் அவரது வீட்டிற்கு சென்றார். இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணகுமார், முருகன் இருவரும் சேர்ந்து பீர்பாட்டிலால் வீரசேகர் வயிற்றில் குத்தினர். அதில், குடல் சரிந்து மயங்கி விழுந்த விரசேகரை அங்கிருந்தவர்கள் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்கு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரது வாக்குமூலத்தின் பேரில், விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து, கிருஷ்ணகுமார், முருகனை கைது செய்தனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் போதையில் அட்டகாசம் செய்த கும்பல் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அடங்குவதற்குள், பீர் பாட்டிலால் நண்பரை குத்திய சம்பவம், விருத்தாசலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us