/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மதுபான பாட்டில்கள் பதுக்கி விற்றவர் கைது
/
மதுபான பாட்டில்கள் பதுக்கி விற்றவர் கைது
ADDED : ஜூன் 04, 2025 09:32 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி; பண்ருட்டியில் புதுச்சேரி மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி அடுத்த திருவதிகை வீராணம் சாலையை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் கிருபாகரன்,26; இவர் இதே பகுதியில் மதுபான பாட்டில்கள் விற்கப்படுவதாக வந்த தகவலின்பேரில் நேற்று காலை டி.எஸ்.பி.தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் புதுச்சேரி மதுபான பாட்டில்கள் கடத்தி வந்தது விற்பனை செய்த 91 பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் கிருபாகரன்,26; மீது வழக்குபதிந்து அவரை கைது செய்தனர்.