sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாவட்டத்தில் மானியத்துன் கடனுதவி பெற  புதிய தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம் 

/

மாவட்டத்தில் மானியத்துன் கடனுதவி பெற  புதிய தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம் 

மாவட்டத்தில் மானியத்துன் கடனுதவி பெற  புதிய தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம் 

மாவட்டத்தில் மானியத்துன் கடனுதவி பெற  புதிய தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம் 


ADDED : மே 29, 2025 03:31 AM

Google News

ADDED : மே 29, 2025 03:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: புதிய தொழில்முனைவோர் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்ட தொழில் மையம் சார்பில் புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் புதியதாக தொழில் துவங்குபவர்களுக்கு அரசு மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தொழில் முனைவோர் தமிழகத்தில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வசிப்பவராக இருத்தல் வேண்டும். பொதுப் பிரிவினர் 21 வயது முதல் 45 வயது. சிறப்புப் பிரிவினர் 21 வயது முதல் 55 வயது வரை இருக்க வேண்டும். கல்வித் தகுதி 12ம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ அல்து தொழிற்கல்வி படித்திருக்க வேண்டும்.

திட்ட மதிப்பீடு குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.5 கோடி வரை. இந்த தொகையில் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை தொழில் முனைவோர் பங்களிப்பாக இருத்தல் வேண்டும். புதிய தொழில் துவங்குபவர்கள் சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழிலாக இருக்க வேண்டும்.

இந்த திட்டத்தின் கீழ் தொழில் துவங்கும் தொழில் முனைவோருக்கு அரசு நிலம், கட்டடம் மற்றும் இயந்திர தளவாடங்களின் மதிப்பில் 25 சதவீதம் மானியமாக அதிகபட்ச தொகையாக ரூ.75 லட்சம் வழங்கப்படும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

ஆர்வமுள்ள முதல் தலைமுறை தொழில்முனைவோர் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு கடலுார் மாவட்ட தொழில் மையம், பொது மேலாளர் நேரிலோ அல்லது 04142-290116, 89255 33939 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us