sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆனிதிருமஞ்சன விழாவில் கனகசபை மீதேறி வழிபட அனுமதிக்கக்கோரி மனு   

/

ஆனிதிருமஞ்சன விழாவில் கனகசபை மீதேறி வழிபட அனுமதிக்கக்கோரி மனு   

ஆனிதிருமஞ்சன விழாவில் கனகசபை மீதேறி வழிபட அனுமதிக்கக்கோரி மனு   

ஆனிதிருமஞ்சன விழாவில் கனகசபை மீதேறி வழிபட அனுமதிக்கக்கோரி மனு   


ADDED : ஜூன் 19, 2025 05:33 AM

Google News

ADDED : ஜூன் 19, 2025 05:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில், ஆனி மாத உற்சவத்தில், கனகசபை மீதேறி வழிபட தீட்சிதர்கள் அனுமதிக்க வேண்டும் என தெய்வீக பக்தர்கள் பேரவை முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவன தலைவர் ஜெமினி ராதா அனுப்பியுள்ள மனு:

சிதம்பரம் நடராஜர் கோவில், கனகசபை மீதேறி தரிசனம் செய்ய அனுமதி அளித்து, கடந்த 2022 -ம் ஆண்டு, அரசு, அரசாணை பிறப்பித்தது. அதன்படி பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். கடந்த ஆண்டு விழாவின்போது, 4 நாட்கள், தீட்சிதர்கள் அனுமதி மறுத்ததால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது.

இந்நிலையில், வரும் 23 ல், ஆனி திருமஞ்சன தரிசன விழா துவங்குகிறது. ஜூலை 1 ல் தேரும், 2 ல் ஆனிதிருமஞ்சன தரிசனமும் நடக்கிறது. பக்தர்களின் நலன் கருதி, தரிசன நேரத்தை முன் கூட்டியே அறிவித்து, தாமதமின்றி நடத்த பொது தீட்சிதர்களுக்கு அறிவுறுத்துவது, கோவிலில் அவசர சிகிச்சை முதல் உதவி மையம், தற்காலிக கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

குறிப்பாக, தரிசன விழா நடைபெறும் முக்கிய 4 நாட்களும் கனகசபை மீதேறி தரிசனம் செய்ய தடை விதிக்க கூடாது என அறநிலையத்துறை சார்பில் தீட்சிதர்களுக்கு அறிவுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us