/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பஸ்சில் இருந்து விழுந்து எஸ்.எஸ்.ஐ., பலி
/
பஸ்சில் இருந்து விழுந்து எஸ்.எஸ்.ஐ., பலி
ADDED : மே 17, 2025 07:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி : சிதம்பரம் அடுத்த வல்லம்படுகையை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, 60; கடலுாரில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவர் ஆவினங்குடி போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார்.
இரவு பணிக்காக நேற்று காலை டி.என். 32 -என். 4461 பதிவெண் கொண்ட அரசு பஸ்சில் விருத்தாசலத்தில் இருந்து ஆவினங்குடி சென்று கொண்டிருந்தார். மதியம் 2:00 மணிக்கு ஆவினங்குடி பஸ் நிறுத்தம் வந்ததும் பஸ்சில் இருந்து இறங்க படியில் நின்ற போது, தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
ஆவினங்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.