/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் வழங்கல்
/
நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் வழங்கல்
ADDED : செப் 23, 2025 11:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநத்தம் : ராமநத்தம் அடுத்த மா.புடையூரில் மக்கள் குறை கேட்பு முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மங்களூர் ஒன்றிய முன்னாள் சேர்மன் சுகுணா சங்கர் தலைமை தாங்கினார்.
தாசில்தார் உதயகுமார் முன்னிலை வகித்தார். அமைச்சர் கணேசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, நலத்திட்ட உதவிகள் வழங்கி, பொது மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றார்.
தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் வெங்கடேசன்,ஒன்றிய செயலாளர்கள் செங்குட்டுவன், அமிர்தலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர். இதே போன்று, கல்லுார் கிராமத்திலும் மக்கள் குறை கேட்பு முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.