ADDED : மே 24, 2025 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார் : மனைவி மாயமானது குறித்து கணவர் போலீசில் புகார் அளித்தார்
வடலுார் அடுத்த கல்லுக்குழியைச் சேர்ந்தவர் முத்துக்குமார், 35. இவரது மனைவி சண்முகப்பிரியா,25; இவர், வடலுார் ரயில்வே கேட் அருகே உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்கவில்லை.
இதுகுறித்து முத்துக்குமார் அளித்த புகாரின் பேரில், வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து சண்முகபிரியாவை தேடி வருகின்றனர்.