/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வயிற்று வலியால் அவதி தொழிலாளி தற்கொலை
/
வயிற்று வலியால் அவதி தொழிலாளி தற்கொலை
ADDED : செப் 14, 2025 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : Lவயிற்று வலியால் அவதியடைந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லிக்குப்பம் அடுத்த நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல், 41; இவர், கடலுாரில் பூக்கடை தொழிலாளி.
வயிற்று வலியால் அவதியடைந்த அவர், பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
நேற்று முன்தினம் வேலையை முடித்து வீட்டுக்கு வந்த வெற்றிவேலுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால் மனமுடைந்த அவர் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார்.
உடன், குடும்பத்தினர் மீட்டு, கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.
புகாரின் பேரில், நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.