sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஆற்றில் குளித்தபோது 2 வாலிபர் உயிரிழப்பு

/

ஆற்றில் குளித்தபோது 2 வாலிபர் உயிரிழப்பு

ஆற்றில் குளித்தபோது 2 வாலிபர் உயிரிழப்பு

ஆற்றில் குளித்தபோது 2 வாலிபர் உயிரிழப்பு


ADDED : ஜூன் 15, 2024 07:41 AM

Google News

ADDED : ஜூன் 15, 2024 07:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி : தென்பெண்ணை ஆற்றில் குளித்த போது, இரு வாலிபர்கள் உயிரிழந்தனர்.

தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த, ஜடையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராஜ், 22, அதே ஊரை சேர்ந்தவர்கள் கார்த்திகேயன், 23, அக்மல் 23. மூவரும் நண்பர்கள். இவர்கள் பெட்ரோல் பங்க்கில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த வாரம் ஜெயராஜின் அண்ணன் ஹரிஷ் மனைவி தமிழரசி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

அவரின் ஈமச்சடங்கு செய்வதற்காக நேற்று மதியம், 2:00 மணிக்கு மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்றுக்கு வந்தனர். அங்கு ஈமச்சடங்கு செய்து விட்டு, சடங்கில் கலந்து கொண்ட அனைவரும் உணவு அருந்திவிட்டு மாலை, 5:00 மணியளவில் அவரவர் வீட்டிற்கு சென்று விட்டனர்.

இந்நிலையில், நண்பர்கள் மூவரும் ஆற்றில் குளித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வருவதாக, உறவினர்களிடம் தெரிவித்திருந்த நிலையில், தென்பெண்ணை ஆற்றில் உள்ள பழுதான பாலத்தின் மேல் இருந்து மூவரும் குளிப்பதற்காக குதித்துள்ளனர். இதில் அக்மல் மட்டும் தப்பியுள்ளார்.

ஜெயராஜ், கார்த்திகேயன் இருவரும் ஆற்றில் மூழ்கியதால் அக்மல் கூச்சலிட்டார். அப்பகுதி மக்கள் பாரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போச்சம்பள்ளி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ஆனந்தன் தலைமையிலான குழுவினர், இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின் உயிரிழந்த இருவரின் உடலை மீட்டனர்.

பாரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us