sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரசு பள்ளி மாணவர்களின் காலை உணவில் கிடந்த பல்லி

/

அரசு பள்ளி மாணவர்களின் காலை உணவில் கிடந்த பல்லி

அரசு பள்ளி மாணவர்களின் காலை உணவில் கிடந்த பல்லி

அரசு பள்ளி மாணவர்களின் காலை உணவில் கிடந்த பல்லி


ADDED : ஜூலை 24, 2024 09:51 PM

Google News

ADDED : ஜூலை 24, 2024 09:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி:தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த தேவரசம்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இதன் தலைமை ஆசிரியை பாக்கியலட்சுமி. பள்ளியில், 1 - 5 ம் வகுப்பு வரை படிக்கும், 60 மாணவ, மாணவியருக்கு, காலை உணவு திட்டத்தில் உணவு வழங்கப்படுகிறது. நேற்று காலை வழக்கம் போல, 8:30 மணிக்கு, 3 சமையலர்கள் மாணவர்களுக்கு காலை உணவாக, உப்புமா சமைத்து பரிமாற தொடங்கினர். சிலருக்கு பரிமாறிய நிலையில், உணவில் பல்லி இறந்து கிடந்தது. உடனே, பரிமாறியதை நிறுத்தினர். மருத்துவக் குழுவினர் வந்து, உணவு சாப்பிட்ட, 19 மாணவ, மாணவியரை பரிசோதனை செய்து, ஓ.ஆர்.எஸ்., கரைசல் வழங்கி, உடல் நலனை பரிசோதித்தனர். யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

'உணவு சமைக்கும் போது, பல்லி விழுந்திருந்தால் அதன் உடல் சிதைந்திருக்கும். உணவு பரிமாறும்போது விழுந்ததால், அது முழுமையாக இருந்தது' என, அதிகாரிகள் கூறினர். காலை உணவில் பல்லி விழுந்த தகவல் தெரிந்த குழந்தைகளின் பெற்றோர், பள்ளியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us