sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பாலக்கோட்டில் தொடர் திருட்டு போலீசாரின் இரவு ரோந்துக்கு பொதுமக்கள் வலியுறுத்தல்

/

பாலக்கோட்டில் தொடர் திருட்டு போலீசாரின் இரவு ரோந்துக்கு பொதுமக்கள் வலியுறுத்தல்

பாலக்கோட்டில் தொடர் திருட்டு போலீசாரின் இரவு ரோந்துக்கு பொதுமக்கள் வலியுறுத்தல்

பாலக்கோட்டில் தொடர் திருட்டு போலீசாரின் இரவு ரோந்துக்கு பொதுமக்கள் வலியுறுத்தல்


ADDED : ஜூன் 14, 2024 01:27 AM

Google News

ADDED : ஜூன் 14, 2024 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்கோடு, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு நகர் பகுதியில் ஏற்படும் தொடர் திருட்டை தடுக்க, போலீசாரின் இரவு ரோந்துக்கு, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தர்மபுரி, பாலக்கோடு நகர் பகுதி மற்றும் எம்.ஜி.,ரோடு பகுதியில், பல வணிக நிறுவனங்கள், நகை, ஜவுளி, சில்வர் மற்றும் பித்தளை பாத்திரம் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு, பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பேர் வந்து செல்கின்றனர். பெரும்பாலான இந்த கடைகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனாலும், இரவில் கடைகளின் பூட்டை உடைத்து, திருட்டுச்சம்பவங்கள் நடந்து வருகிறது. இதுகுறித்து, பலமுறை தகவல் தெரிவித்தும் போலீசார் முறையாக நடவடிக்கை எடுப்பதில்லை என, கடை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

போலீசாரும், இரவில் ரோந்து பணிக்கு வராததால், இவ்வாறான திருட்டு சம்பங்கள் தொடர்ந்து நடப்பதாக, வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். தொடர்ந்து நடக்கும் திருட்டை தடுக்க, போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட, வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us