ADDED : ஜூன் 14, 2024 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, தர்மபுரி அடுத்த, ஜோகிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அரசினர் உயர்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு சீருடை வழங்கும் விழா நேற்று நடந்தது.
தர்மபுரி அடுத்த, பெல்ரம்பட்டி அரசு பள்ளியில், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு, இலவச சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.