sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியம் தாமதம் கண்டித்து தர்மபுரி ஜி.ஹெச்.,ல் தர்ணா

/

ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியம் தாமதம் கண்டித்து தர்மபுரி ஜி.ஹெச்.,ல் தர்ணா

ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியம் தாமதம் கண்டித்து தர்மபுரி ஜி.ஹெச்.,ல் தர்ணா

ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியம் தாமதம் கண்டித்து தர்மபுரி ஜி.ஹெச்.,ல் தர்ணா


ADDED : செப் 17, 2025 01:55 AM

Google News

ADDED : செப் 17, 2025 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி :கால தாமதமாக ஊதியம் வழங்குவதை கண்டித்து, தர்மபுரி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், ஒப்பந்த பணியாளர்கள் நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர்.

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், துப்புரவு மற்றும் பாதுகாப்பு உட்பட பல்வேறு பணிகளுக்கு சென்னையை சேர்ந்த, தனியார் நிறுவனம், 450 ஒப்பந்த பணியாளர்களை நியமனம் செய்துள்ளது. இவர்களுக்கு மாதந்தோறும் தாமதமாக ஊதியம் வழங்குவதாக பணியாளர்கள் மத்தியில் தொடர்ந்து குற்றச்சாட்டு உள்ளது.

மாதம், 5ம் தேதிக்குள் தங்களுக்கு ஊதியம் வழங்க, ஒப்பந்த பணியாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், இம்மாத ஊதியத்தை (செப்.16) நேற்று வரை வழங்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த ஒப்பந்த பணியாளர்கள் நேற்று காலை, 7:00 மணி முதல், பணியை புறக்கணித்து மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அவர்களிடம், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கண்காணிப்பாளர் சிவகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது, மாதந்தோறும் விரைவாக ஊதியம் வழங்க பேசி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து, ஒப்பந்த பணியாளர்கள் தர்ணாவை கைவிட்டு காலை, 8:20 மணிக்கு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us