sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அரூர் வர்ணீஸ்வரர் கோவில் குளத்தை முறையாக சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை

/

அரூர் வர்ணீஸ்வரர் கோவில் குளத்தை முறையாக சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை

அரூர் வர்ணீஸ்வரர் கோவில் குளத்தை முறையாக சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை

அரூர் வர்ணீஸ்வரர் கோவில் குளத்தை முறையாக சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை


ADDED : ஜூன் 25, 2024 02:49 AM

Google News

ADDED : ஜூன் 25, 2024 02:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் பஸ் ஸ்டாண்ட் அருகில், பல நுாறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, வர்ணீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் பக்தர்கள் புனித நீராடுவதற்காக குளம் உள்ளது.

இக்குளம் போதிய பராமரிப்பின்றி பல ஆண்டுகளாக இருந்ததுடன், ராஜகால்வாயில் இருந்து வரும் சாக்கடை கழிவுநீர் நிரம்பி பச்சை நிறத்தில் இருந்ததால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை இருந்தது.

இந்நிலையில் குளத்தை துார்வாரி, படிக்கட்டுகள் அமைத்தல், சுற்றுச்சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்ய பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், 18 லட்சம் ரூபாய் மதிப்பில் குளம் சீரமைக்கும் பணி கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது.

குளம் முறையாக சீரமைக்கப்படவில்லை என புகார் தெரிவித்துள்ள பக்தர்கள், பெயரளவிற்கு சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டதால், ஏற்கனவே இருந்தது போல் தற்போதும், குளத்தில் பச்சை நிறத்தில் சாக்கடை கழிவு நீர் தேங்கியுள்ளது. மேலும், சுற்றுச் சுவருக்கு சிமென்ட் பூச்சு கூட செய்யவில்லை.

எனவே, குளத்தில் சாக்கடை கழிவு நீர் கலப்பதை தடுப்பதுடன், முறையாக சீரமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us