sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

நாட்டு வெடிகுண்டை கடித்த நாய் பலி

/

நாட்டு வெடிகுண்டை கடித்த நாய் பலி

நாட்டு வெடிகுண்டை கடித்த நாய் பலி

நாட்டு வெடிகுண்டை கடித்த நாய் பலி


ADDED : மே 27, 2025 02:10 AM

Google News

ADDED : மே 27, 2025 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொப்பூர் தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே மேல்ஈசல்பட்டியிலுள்ள விவசாய தோட்டத்தில், விவசாயி மல்லையன் வசிக்கிறார். அவர் தன் பாதுகாப்புக்காக டாபர்மேன் மற்றும் சிப்பிப்பாறை வகை நாய்களை வளர்த்து வருகிறார். பகலில் கட்டப்பட்டிருக்கும் நாய்கள், இரவில் கழட்டி விடப்படுவது வழக்கம்

கடந்த, 24ல் இரவு, 8:30 மணிக்கு சாப்பாடு வைக்க விஜயகுமாரின் தந்தை மல்லையன், நாய்களை கூப்பிட்ட போது, சிப்பிபாறை நாய் மட்டும் வந்து சாப்பிட்டுள்ளது. டாபர்மேன் நாய் வரவில்லை. அப்போது, வீட்டின் அருகே வெடிச் சத்தம் கேட்டுள்ளது. மல்லையன் சென்று பார்த்தபோது, நாயின் கீழ்தாடை கிழிந்து படுகாயத்துடன் இறந்து கிடந்தது.நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு நிலத்தை சுற்றி பார்த்தபோது, வெடி வெடித்த இடத்தில், ரத்தக்கறையும், நாட்டு வெடிகுண்டு வெடித்தது போலும் இருந்துள்ளது. மல்லையன் மகன் விஜயகுமார், 43, புகார் படி, தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us