ADDED : ஏப் 25, 2026 05:30 AM
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் கச்சேரிமேட்டில், தாலுகா அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன், டி.எஸ்.பி., அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சார்-பதிவாளர் அலுவலகம், நீதிமன்றங்கள், வங்கிகள் என அமைந்துள்ளன.
இவற்றிற்கு தினமும், ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் நிலையில், பொது கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், பெண்கள், முதியவர்கள் உள்பட, அனைத்து தரப்பினரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கச்சேரிமேட்டில் கழிப்பறை மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தர, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அதிக விலைக்கு மது விற்றதால்
தகராறு: தொழிலாளி படுகாயம்
பாப்பிரெட்டிப்பட்டி, ஏப். 25
தர்மபுரி மாவட்டம் புட்டிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், 20-க்கும் மேற்பட்ட சந்து கடைகள் உள்ளன. தேர்தலையொட்டி, இரு தினங்களாக மதுபான கடை
களுக்கு அரசு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால், சந்து கடை வியாபாரிகள் மது பாட்டில்களை, அதிக விலைக்கு விற்பனை
செய்தனர்.
நேற்று காலை 11:00 மணியளவில்
