sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

மனு அளிக்க வந்த பெண்களை சமாதானப்படுத்திய அதிகாரிகள்

/

மனு அளிக்க வந்த பெண்களை சமாதானப்படுத்திய அதிகாரிகள்

மனு அளிக்க வந்த பெண்களை சமாதானப்படுத்திய அதிகாரிகள்

மனு அளிக்க வந்த பெண்களை சமாதானப்படுத்திய அதிகாரிகள்


ADDED : மே 24, 2025 02:02 AM

Google News

ADDED : மே 24, 2025 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர் அரூரில், 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணி வழங்க கோரி, கலெக்டரிடம் மனு அளிக்க திரண்ட பெண்களை, அதிகாரிகள் சமாதானப்படுத்தி அனுப்பினர்.

தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகா அலுவலகத்தில் கடந்த, 20ல் ஜமாபந்தி துவங்கியது. கலெக்டர் சதீஸ், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். நிறைவு நாள் விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக கலெக்டர் சதீஸ், அரூர் தாலுகா அலுவலகம் வந்தார். இந்நிலையில் மதியம், 12:30 மணிக்கு எச்.தொட்டம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட நாச்சினாம்பட்டி, பச்சினாம்பட்டியை சேர்ந்த பெண்கள், தொட்டம்பட்டி மற்றும் மோப்பிரிப்பட்டி பஞ்சாயத்துகளை, அரூர் நகராட்சியுடன் இணைத்ததால், தங்களுக்கு 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணி வழங்காமல் நிறுத்தப்பட்டுள்ளது.

எனவே, அரூர் நகராட்சியுடன் தொட்டம்பட்டி, மோப்பிரிப்பட்டி பஞ்சாயத்துகளை இணைத்ததை ரத்து செய்து, 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க வேண்டும் எனக் கோரி, கலெக்டர் சதீஸிடம் மனு அளிக்க சென்றனர். அப்போது, தாலுகா அலுவலக நுழைவாயிலில் இருந்த ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், பெண்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அவர்களிடம், 100 நாள் வேலை திட்டப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து, கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். உங்களுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சமாதானப்படுத்தினர்.

இதையடுத்து, மனு அளிக்க வந்த பெண்கள் திரும்பி சென்றனர்.






      Dinamalar
      Follow us