/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மின் மோட்டார் ஒயர் திருடியவருக்கு 'காப்பு'
/
மின் மோட்டார் ஒயர் திருடியவருக்கு 'காப்பு'
ADDED : ஜூன் 25, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பென்னாகரம், தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த, வண்ணாத்திப்பட்டியை சேர்ந்த ஜெயமாணிக்கம், 66. இவர் சொந்த ஊரில் விவசாயம் செய்து வருகிறார்.
கடந்த, 22 அன்று அவரது விவசாய கிணற்றில் பாலக்கோடு அடுத்த, சாமனுாரை சேர்ந்த சேகர், 37 மற்றும் ராஜா, 48 ஆகிய இருவரும் மின் மோட்டார் ஒயர்களை திருடியது தெரியவந்தது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன், சேகரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிந்து, தப்பிச்சென்ற ராஜாவை தேடி வருகின்றனர்.