sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டுகோள்

/

நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டுகோள்

நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டுகோள்

நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டுகோள்


ADDED : செப் 15, 2025 01:47 AM

Google News

ADDED : செப் 15, 2025 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி:தர்மபுரி - பாலக்கோடு நெடுஞ்சாலையில், பழைய தர்மபுரி அடுத்த சவுளுர் அருகே, சேலம் - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில், உயர்மட்ட மேம்பாலம் அமைந்துள்ளது. இதில், தர்மபுரியில் இருந்து வரும் வாகனங்கள் சேலம் - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலைக்கு செல்ல, சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தர்மபுரி - பாலக்கோடு புதிய, 4 வழி நெடுஞ்சாலையும் அமைந்துள்ளது. அதேபோல், மேம்பாலம் அருகிலுள்ள மாட்டுகாரனுார், சவுளுர் பகுதிகளுக்கு செல்ல, சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இச்சாலைகளில், சிறு குறு தொழில் நிறுவனங்கள், ரைஸ் மில்கள், பள்ளி கல்லுாரிகள் உள்ளது. இதனால், இங்குள்ள சர்வீஸ் சாலை, பிரிவு சாலைகளில் வாகன போக்குவரத்து எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

பள்ளி, கல்லுாரி வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள் என அதிகப்படியான வாகனங்கள் பயணிக்கும் நிலையில், அப்பகுதியில் வேகத்தடை இல்லாததால், தர்மபுரியில் இருந்து சேலம் - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலைக்கு செல்ல வரும் வாகனங்கள், வரும் வேகத்தில் அப்படியே சர்வீஸ் சாலையில் திரும்பி செல்கின்றன. இதனால், பாலக்கோடு- - தர்மபுரி சாலையில் வரும் வாகன ஓட்டிகள், அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி, சவுளுர் மேம்பாலம் அருகிலுள்ள, நெடுஞ்சாலை, சர்வீஸ் சாலை மற்றும் பிரிவு சாலைகளில் வேகத்தடை அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us