sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பில் மாற்றம்

/

பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பில் மாற்றம்

பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பில் மாற்றம்

பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பில் மாற்றம்


ADDED : ஜூலை 29, 2024 06:26 AM

Google News

ADDED : ஜூலை 29, 2024 06:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பில் 4 அரசு பள்ளி முன்னாள் மாணவர்களுக்கு வாய்ப்பு அளித்து மொத்த எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது.

கல்வி உரிமைச் சட்டம் 6 முதல் 14 வயது குழந்தைகளுக்கு, இலவச கட்டாயக்கல்வியை அடிப்படை உரிமையாக்கி உள்ளது. அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்தல், ஆண்டுதோறும் வளர்ச்சித் திட்டம் தயாரித்து செயல்படுத்தல் போன்றவற்றுக்காக, அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்படுகிறது.

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுகட்டமைப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டு ஆக.2ல் துவங்கி பள்ளி வாரியாக மறுகட்டமைப்பு தேர்தல் நடக்க உள்ளது. முந்தைய உறுப்பினர்கள் எண்ணிக்கையான 20ல் இருந்து, தற்போது கூடுதலாக 4 பேரை சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெண் தலைவர், துணைத்தலைவர், 12 உறுப்பினர்கள் என, பெற்றோர்களாக இருக்க வேண்டும்.

ஒரு முன்னாள் மாணவி உள்பட 2 உள்ளாட்சி பிரதிநிதிகள் தலா ஒரு சுய உதவி குழு உறுப்பினர், கல்வியாளர் இடம் பெறுவர். இதில் தலைமை ஆசிரியர் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். கூடுதலான 4 பேர், குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அரசு பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களாகவும், இதில் 2 பேர் பெண்களாகவும் இருக்க வேண்டும் என, ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us