sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஜடா முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

/

ஜடா முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

ஜடா முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

ஜடா முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்


ADDED : ஜூன் 18, 2024 05:26 AM

Google News

ADDED : ஜூன் 18, 2024 05:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபால்பட்டி : கோபால்பட்டி கே.அய்யாபட்டி ஜடா முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கருவறையில் நாக பாம்பு வந்ததால் பக்தர்கள் பரவசமடைந்து வழிபாடு செய்தனர்.

இவ்விழாவையொட்டி காசி, ராமேஸ்வரம், திருச்செந்துார், திருமலைக்கேணி, அழகர் கோயில் மலை, வைகை உள்ளிட்ட பல்வேறு புனித தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்த குடங்கள் மேளதாளம் முழங்க கோchல் முன் அமைக்கப்பட்ட யாகசாலைக்கு கொண்டுவரப்பட்டது.

கணபதி யாக மஹா சங்கர்ப்பம் வாஸ்து சாந்தி யாக பூஜை நடந்தது. நேற்று காலை கணபதி யாக மஹா சங்கல்ப்பம், யாக சாலையில் வேத பாராயணம் கடம் புறப்பாடு நடந்தது.

சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கோயில் கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் குழுவினர் நடத்தினர்.

நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், மாவட்ட கவுன்சிலர் க.விஜயன், தொழிலதிபர் பி.எம்.எஸ்.கே.அபுதாஹிர்,ஊராட்சி தலைவர் தமிழரசி கார்த்திகைசாமி, ஒன்றிய கவுன்சிலர் ஹரிஹரன் பக்தர்கள் பங்கேற்றனர்.

அன்னதானம் வழங்கப்பட்டது. அப்போது ஜடாமுனிஸ்வரர் கோயில் கருவறையில் நாக பாம்பு வந்ததால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

வடமதுரை: வடமதுரை வெள்ளபொம்மன்பட்டி அருகே ராஜகவுண்டன்பட்டியில் விநாயகர், ராஜகாளியம்மன், மாரியம்மன், பகவதியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

நேற்றுமுன்தினம் மாலை கிராம தெய்வங்களுக்கு கனி வைத்து வழிபட்ட பின் தீர்த்தம், முளைப்பாரி அழைப்புடன் துவங்கிய நிலையில், 2 கால யாக பூஜைகளை தொடர்ந்து நேற்று காலை கடங்கள் புறப்பட கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. வெள்ளபொம்மன்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில் அர்ச்சகர் ஜெகநாதன் அய்யர் தலைமையிலான குழுவினர் கும்பாஷேகத்தை நடத்தினர். சுற்று கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர்.

*ஒட்டன்சத்திரம் ஏ.பி.பி. நகர் ஸ்ரீ வீரவிநாயகர், ஸ்ரீவீரத்துர்க்கை அம்மன், ஸ்ரீஆகாச வில்வேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

இதையொட்டி நேற்று முன்தினம் கணபதி வழிபாடு, மஹாலட்சுமி ஹோமம், துர்கா ஹோமம், சிவமூலமந்திர ஹோமம், கோ பூஜை, நவக்கிரக ஹோமம் நடந்தது. தொடர்ந்து கோபுர சுவாமிகள் கண் திறப்பு, சுவாமி பிம்பசுத்தி சுவாமி சையனாதீவாசம் நடந்தது. மதியம் முளைப்பாரி ,தீர்த்தக்காவடி அழைத்தல் நடந்தது. அன்று இரவு மங்கள இசை, குரு வந்தனம், விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, முதற் காலயாக வேள்வி நடந்தது. நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, மூலவருக்கு ரக் ஷபந்தனம், இரண்டாம் கால யாக வேள்வி, நாடி சந்தானம், திரவிய ஹோமம், தீபாரதனை நடந்தது. பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தம் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானமும் நடந்தது. ஏற்பாடுகளை ஏ.பி.பி. நகர் வீட்டு உரிமையாளர்கள் சங்கம் ,வீர விநாயகர் திருக்கோயில் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us