/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
6.79 லட்சம் பேருக்கு ரூ.75.34 கோடி பரிசு
/
6.79 லட்சம் பேருக்கு ரூ.75.34 கோடி பரிசு
ADDED : ஜன 17, 2024 12:55 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் 6,79,409 ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.75.34 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை யொட்டி தமிழக அரசு சார்பில் அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் பணமும் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் 6,78,460 ரேஷன் அட்டைதாரர்கள், அகதிகள் முகாமைச் சேர்ந்த 949 பயனாளிகள் என 6,79,409 ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.75.34 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கூட்டுறவுத்துறையின் 1004, நுகர்பொருள் வாணிபக் கழகம் 19, மகளி சுயஉதவிக்குழு 12 என 1035 ரேஷன் கடைகளில் மூலமாக இந்த பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.

