ADDED : ஜன 27, 2024 06:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் வருகை அதிக அளவில் இருந்தது.
தைப்பூச பாதயாத்திரை பக்தர்களின் வருகை அதிகரித்தது. பக்தர்கள் அலகு குத்தி, காவடிகள் எடுத்து வந்து நேர்த்தி கடன் சுவாமி தரிசனம் செய்தனர். அடிவாரம் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. பக்தர்கள் ரோப்கார், வின்ச் செல்ல பல மணிநேரம் காத்திருந்தனர். மேலும் மலைக் கோயிலில் பொது தரிசன வழி மற்றும் கட்டண தரிசன வழிகளில் 3 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

