நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட அடிவாரம், மேற்கு கிரி வீதி மகிஷாசுரமர்த்தினி கோயிலில் தைப்பூச பக்தர்களின் பாதுகாப்பு ,நலன் வேண்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.
சிறப்பு அலங்காரத்துடன் கும்ப கலசங்கள் வைத்து கணபதி பூஜை, வேத மந்திரங்கள் முழங்க திசா ஹோமம் பூஜை நடந்தது.
கும்ப கலசங்களுக்கு தீபாராதனை நடைபெற்றது. யாகத்தில் வைக்கப்பட்ட கும்ப கலச புனித நீரில் மகிஷாசுரமர்த்தினி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. கன்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிஹரமுத்துஅய்யர் கோயில் ஊழியர்கள், கலந்து கொண்டனர்.

