/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தரைப்பாலத்தில் உருவான பள்ளத்தால் தடுமாறும் ஓட்டிகள்
/
தரைப்பாலத்தில் உருவான பள்ளத்தால் தடுமாறும் ஓட்டிகள்
தரைப்பாலத்தில் உருவான பள்ளத்தால் தடுமாறும் ஓட்டிகள்
தரைப்பாலத்தில் உருவான பள்ளத்தால் தடுமாறும் ஓட்டிகள்
ADDED : ஜூன் 11, 2025 05:47 AM

சேதமான பயணியர் நிழற்குடை
எரியோடு நல்லமநாயக்கன்பட்டி ரோடு பிரிவில் உள்ள பயணியர் நிழற்குடை சேதமடைந்துள்ளது. பயணிகள் பயன்படுத்த முடியாது வெயில் ,மழையில் நின்று பஸ் ஏறுகின்றனர். சீரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். -- ஆறுமுகம், எரியோடு...............
விபத்துக்கு வாய்ப்பு
நத்தம் செந்துறை ரோட்டில் இரவு நேரங்களில் சுற்றி திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது . விபத்தும் ஏற்படுகிறது . இதனை கட்டுப்படுத்த உள்ளாட்சி துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரபு, நத்தம்.
............--------
சாய்ந்த பெயர் பலகை
திண்டுக்கல் நாகல்நகரிலிருந்து மதுரை செல்லும் ரோட்டில் உள்ள பெயர் பலகை சாய்ந்த நிலையில் உள்ளது . இதை சரி செய்ய நெடுஞ்சாலை துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.மகேந்திரன், நாகல் நகர்.
...........----------தரைபாலம் சேதம்
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் மேற்கு பகுதி ரோட்டில் தரைபாலம் சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது .பள்ளத்தில் வேறு குச்சியை நட்டு வைத்துள்ளனர் .இரவு நேரங்களில் பள்ளம் தெரியாது விழுகின்றனர் .செல்வம், திண்டுக்கல்.
..................----------விழும் நிலையில் மின் கம்பம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் மனு கொடுக்கும் பகுதியில் மின்கம்பத்தின் அடிப்பகுதி சிமென்ட் பூச்சு சேதமடைந்துள்ளது .இதனால் மின் கம்பம் விழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைசரி செய்ய வேண்டும். ராமு, திண்டுக்கல்.
...............---------குப்பையால் சுகாதாரக்கேடு
லெக்கையங்கோட்டை பைபாஸ் ரோடு கொல்லப்பட்டி குளம் அருகே சாக்கு மூடைகளில் கொண்டு வந்து குப்பை கொட்டப்படுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது .இதன் மூலம் நிலத்தடி நீரிலும் பாதிப்பு எற்படும் நிலை உள்ளது. -வீரப்பன் ஒட்டன்சத்திரம்.
........----------
தெருவில் ஓடும் கழிவு நீர்
முள்ளிப்பாடி ஊராட்சி செட்டியபட்டி வடக்கு தெருவில் சாக்கடை இல்லாததால் கழிவு நீர் பாதையில் தேங்கி நிற்கிறது ,கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு தீர்வு காண வேண்டும். லதா, செட்டியபட்டி.
..............