/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வாராஹி அம்மன் கோயிலில் பவுர்ணமி யாகம்
/
வாராஹி அம்மன் கோயிலில் பவுர்ணமி யாகம்
ADDED : ஜன 26, 2024 05:46 AM

சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோயிலில் தை மாத பவுர்ணமியையொட்டி உலக நன்மை வேண்டி நடந்த யாக பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
உலக நன்மை வேண்டி நடந்த பூஜையில் வாராஹி அம்மனுக்கு திரவிய அபிஷேகம், பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்ய சிறப்பு பூஜை , தீபாராதனை நடந்தது. அதிகாலையில் அஸ்வாருட வாராஹி யாகம் ,காலை 10:00 மணிக்கு மகா வாராஹி யாகம் நடந்தது. பக்தர்கள் தேங்காயில் தீபமேற்றி சிறப்பு வழிபாடு செய்தனர். வேள்வி பூஜையை வாராஹி அறக்கட்டளை தலைவரும் வரசித்தி வாராஹி அம்மன் கோயில் பீடாதிபதியுமான சஞ்சீவி சுவாமிகள் நடத்தி வைத்தார்.
யாக பூஜையில் வரசித்தி வாராகி அம்பாள் மகாலட்சுமி சொரூபமாக காட்சி தந்தார். திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

