/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிதைந்த ரோடால் திணறும் வாகன ஓட்டிகள்
/
சிதைந்த ரோடால் திணறும் வாகன ஓட்டிகள்
ADDED : ஜன 26, 2024 05:51 AM

நெரிசலால் அவதி
திண்டுக்கல் மேற்கு ரத வீதியில் இருசக்கர வாகனங்களை ஆங்காங்கே நிறுத்துவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சரக்கு லாரியை நடுரோட்டில் நிறுத்தி சரக்குகளை இறக்குவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் .முத்துக்குமரன் ,திண்டுக்கல்.
.................----
சிதைந்த ரோடு
பிலாத்தில் தென்னம்பட்டி ரோடு குறுகி வளைவு பகுதியில் சாக்கடை கட்டமைப்பு சிதைந்து கிடக்கிறது. இதனால் ரோடு விளம்பில் இருக்கும் பெரும் பள்ளத்தில் வாகனங்கள் சிக்கி விபத்துக்களை சந்திக்கின்றன. இதை சீரமைக்க வேண்டும். - திருமலைச்சாமி, பிலாத்து.
.................------
பள்ளத்தால் விபத்து
வேம்பார்பட்டி செடிப்பட்டி ரோடு சேதமடைந்து ஜல்லி கற்கள் பெயர்ந்து, பள்ளங்கள் உருவாக மழையில் தண்ணீர் நிறைந்து வாகனங்கள் செல்ல தகுதியற்ற நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைவதுடன் விபத்து அபாயம் உள்ளது. நிஷாந்த், செடிப்பட்டி.
...............--------தாழ்வான கேபிள் வயர்கள்
திண்டுக்கல் பழைய கரூர் ரோடு அருகே மின்கம்பத்தில் கேபிள் வயர்கள் தாழ்வாக உள்ளதால் விபத்து அபாயம் உள்ளது.சில இடங்களில் தரையில் கிடைக்கிறது .வாகனங்களில் செல்வோர் பாதசாரிகள் பெரிதும் பாதிப்படைகின்றனர் . சின்னசாமி, திண்டுக்கல்.
...................---------தெருநாய்கள் தொல்லை
கூம்பூர் அருகே எல்லாப்பட்டி ரோட்டில் அதிகமாக தெருநாய்கள் உள்ளது .பள்ளி மாணவர்கள் ,இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களை துரத்தி கடிக்கிறது .இது தொடர்பாக பலமுறை கூறியும் யாரும் நடவடிக்கை இல்லை . இதை கட்டுப்படுத்த வேண்டும் . நாகராஜன், தென்றல்நகர்.
............---------நடைமேடை சேதம்
திண்டுக்கல் - பழநி ரோடு நான்கு வழிச்சாலை சந்திப்பு அருகே சாக்கடை நடைமேடை சேதம் அடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளதால் விபத்து அபாயம் உள்ளது .இரவு நேரங்களில் பள்ளம் தெரியாமல் கீழே விழுகின்றனர் . இதை சரிசெய்ய வேண்டும்.விக்னேஷ், திண்டுக்கல்.
................----------
குப்பபையால் தொற்று
பழநி அடிவாரம் கிழக்கு பாட்டாளி தெரு தனியார் பள்ளி அருகே குப்பையை குவித்துள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. குப்பை சிதறி கிடப்பதால் கடந்து செல்லும் பக்தர்கள், பாதசாரிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது . இதற்கோர் வழி காண வேண்டும். கார்த்திகா, பழநி.
...................

