ADDED : ஜன 05, 2024 05:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாமிநாதபுரம் :  பழநி புஷ்பத்துார் ஸ்ரீ வித்யா மந்திர் சி.பி.எஸ்.சி., பள்ளியில் படிக்கும் மாணவிகள் அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி மையம் நாசா   காலண்டரில் இடம்பெறும் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த பள்ளியில் பயிலும்  7ம் வகுப்பு மாணவி தித்திகா 11,    12 வயதுக்கான பிரிவில் இரண்டாம் இடம்,   6 வயது  உட்பட்ட பிரிவில் முதல் வகுப்பு மாணவி துயிலோவியா இரண்டாம் இடம்,    9 வயதுக்கான பிரிவில் 4ம் வகுப்பு மாணவி லயாஷினி மூன்றாம் இடம் பெற்றுள்ளனர்.
2024  ஜனவரி, ஜூன், நவம்பர் மாத பக்கத்தில் இவர்களது   ஓவியம் இடம் பெற்றுள்ளது.    மாணவிகளை பள்ளி தாளாளர் சாமிநாதன், இயக்குனர் கார்த்திகேயன், முதல்வர் வசந்தா, பெற்றோர் பாராட்டினர்.

