sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

/

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

தேய்பிறை அஷ்டமி வழிபாடு


ADDED : செப் 15, 2025 04:29 AM

Google News

ADDED : செப் 15, 2025 04:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

தாடிக்கொம்பு சவுந்திரராஜப்பெருமாள் கோயிலில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு இளநீர், தேன், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. கோயமுத்துார், திருப்பூர், ஈரோடு கரூர், பல்லடம், உடுமலைப்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி, உறுப்பினர்கள், பட்டாச்சாரியார்கள் செய்திருந்தனர்.

திண்டுக்கல்லில் பத்மகிரீஸ்வரர் அபிராமியம்மன் கோயில், கூட்டுறவுநகர் செல்வ விநாயகர் கோயில், ஜான்பிள்ளை சந்து வாராகி அம்மன் கோயில், பழநி ரோடு பத்திரகாளியம்மன் கோயில், ரயிலடி விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் பைரவர் சன்னதியில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. மிளகு ,தேங்காய், வெள்ளைப்பூசணியில் விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிப்பட்டனர்.

ரெட்டியார்சத்திரம் : கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில், மூலவர் செங்கமலவல்லி சமேத பெருமாளுக்கு, திரவிய அபிஷேகத்துடன், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

அனுக்கிரக பைரவருக்கு விசேஷ பூஜைகள் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

செம்பட்டி : கோதண்டராமர் கோயில், சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.






      Dinamalar
      Follow us