/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
55 ஆண்டுகளுக்கு பின் துார்வாரப்பட்ட தீர்த்த கிணறு
/
55 ஆண்டுகளுக்கு பின் துார்வாரப்பட்ட தீர்த்த கிணறு
ADDED : பிப் 12, 2024 05:39 AM

திண்டுக்கல்: தாடிகொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அக்னி தீர்த்த கிணறு 55 ஆண்டுகளுக்கு பின் நேற்று துார்வாரப்பட்டது.
திண்டுக்கல் தாடிக்கொம்பில் உள்ள சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் அக்னிதீர்த்த கிணறு 800 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக உள்ளது.
மன்னர்களால் உருவாக்கப்பட்ட இந்த தீர்த்தக் கிணற்றிலிருந்துதான் சாமிக்கு பூஜை செய்வதுதான் முன்பு வழக்கமாக இருந்தது. இந்நிலையில் இக்கிணறு கடந்த 55 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது.
ஆகம விதிகளின்படி கிணற்று தீர்த்தத்தையே பயன்படுத்த வேண்டுமென பக்தர்களின் நீண்டநாள் வேண்டுகோளாக இருந்த நிலையில் திண்டுக்கல் தீயணைப்பு துறையின் உதவியோடு நேற்று இந்த அக்னித்தீர்த்தக்கிணறு தற்போது மீண்டும் துார்வாரப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி, உறுப்பினர்கள் ஈஸ்வரி வாசுதேவன், சுசீலா ராஜூ, பிரபாகரன், ராமானுஜம் ஆகியோர் செய்தனர்.

