Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பா.ஜ., மகளிரணி ஜாமினில் விடுவிப்பு

பா.ஜ., மகளிரணி ஜாமினில் விடுவிப்பு

பா.ஜ., மகளிரணி ஜாமினில் விடுவிப்பு


ADDED : மார் 27, 2025 01:58 AM

Follow on Google

ADDED : மார் 27, 2025 01:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பா.ஜ., மகளிரணி ஜாமினில் விடுவிப்பு

காங்கேயம்:டாஸ்மாக்கில் நடந்த ஊழலை கண்டித்து, சென்னையில் சில தினங்களுக்கு முன், மாநில பா.ஜ., தலைவர் அண்ணாமலை போராட்டம் நடத்த முயன்றார். அவரை போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளில், முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டும் போராட்டத்தில் பா.ஜ., கட்சியினர் ஈடுபட்டனர். இவ்வாறு ஈடுபட்டவர்கள் மீது போலீசார்

வழக்குப்பதிவு செய்தனர். இதன்படி காங்கேயத்தை அடுத்த நால்ரோடு அரசு மதுக்கடையில், பா.ஜ., மாவட்ட மகளிரணி நிர்வாகி புவனேஸ்வரி

தலைமையில் நிர்வாகிகள், முதல்வர் புகைப்படத்தை ஒட்டினர். இவர்கள் மீது காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வழக்கில் சம்பந்தபட்ட புவனேஸ்வரி, கலா நடராஜன், மரகதம், நிவேதா, கார்த்திகா ஆகியோரை விசாரணைக்கு வரும்படி போலீசார் சம்மன் வழங்கினர். இதன்படி அனைவரும் நேற்று, காங்கேயம் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகினர்.

போலீசார் அனைவரையும் சொந்த ஜாமினில் விடுவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap