ADDED : ஜூலை 24, 2024 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீர் நாள் கூட்டம் வரும், 26ல் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நடக்கிறது.
கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகிக்கிறார். காலை, 10:00 மணி முதல், 11:30 மணி வரை மனுக்கள் பெறப்படும். 11:30 மணி முதல் மதியம், 12:30 மணி வரை விவசாய சங்க பிர-திநிதிகள் விவசாயம் தொடர்பாக, தங்கள் பகுதி பிரச்னைகள், கருத்துக்களை தெரிவிக்கலாம்.
மதியம், 12:30 மணி முதல், 1:30 மணி வரை அலுவலர்கள் விளக்கம் அளிப்பர்.