/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தீயணைப்பு வீரர்கள் 'லீவு' எடுக்க கட்டுப்பாடு
/
தீயணைப்பு வீரர்கள் 'லீவு' எடுக்க கட்டுப்பாடு
ADDED : ஜூலை 30, 2024 03:28 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தீயணைப்பு வீரர்கள் விடுமுறை எடுக்க கட்டப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மேட்டூரில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்-ளது. மேட்டூர் அணை எந்த நேரத்திலும் முழு கொள்ளளவையும் எட்ட கூடும் என்பதால் மேட்டூர் அணைக்கு வரும் உபரி நீர் முழுமையாக வெளியேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மேடான பகுதிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்-ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் தீயணைப்பு துறை வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். காவிரி கரையோரம் உள்ள அந்தியூர், பவானி, ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி தீய-ணைப்பு நிலைய வீரர்கள் மீட்பு பணி மேற்கொள்ளும் வகையில் எந்த நேரத்திலும் தயார் நிலையில் இருக்க கேட்டு கொள்ளப்பட்-டுள்ளனர். மேலும் காவிரியில் வெள்ள அபாய அச்சம் நீங்கும் வரை, அத்தியாவசியத்தை தவிர வேறெந்த நோக்கத்துக்காகவும் விடுமுறை எடுக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.