sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோடு மாவட்டத்தில் 64,400 குடிநீர் இணைப்புகள் வழங்க நடவடிக்கை

/

ஈரோடு மாவட்டத்தில் 64,400 குடிநீர் இணைப்புகள் வழங்க நடவடிக்கை

ஈரோடு மாவட்டத்தில் 64,400 குடிநீர் இணைப்புகள் வழங்க நடவடிக்கை

ஈரோடு மாவட்டத்தில் 64,400 குடிநீர் இணைப்புகள் வழங்க நடவடிக்கை


ADDED : ஜன 26, 2024 10:10 AM

Google News

ADDED : ஜன 26, 2024 10:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில், 4.19 லட்சம் வீடுகளுக்கான குடிநீர் இணைப்பில், மீதி, 64,400 குடிநீர் இணைப்புகள் விரைவில் வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஊரக பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டதை ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் உறுதி செய்து வருகின்றனர்.

இதன்படி ஈரோடு மாவட்டத்தில் நான்கு லட்சத்து, 18 ஆயிரத்து, 981 வீடுகளுக்கு இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர்கள் கூறியதாவது: கடந்த, 2020 ஏப்., 1க்கு முன் ஊரக பகுதிகளில் பிற திட்டங்களில், 64,412 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கினர். 2020-21ல் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில், 96,656 வீடுகளுக்கு இணைப்பு தரப்பட்டது. தொடர்ந்து, 2021 முதல் தற்போது வரை, ஜல்ஜீவன் மிஷன் மற்றும் பிற குடிநீர் திட்டங்கள் மூலமும், மூன்று லட்சத்து, 54,581 குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுவிட்டது.

மலைப்பகுதி, மேல்நிலை குடிநீர் தொட்டி இல்லாத இடங்கள் என, 64,400 வீடுகளுக்கு இன்னும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டியுள்ளது. இவ்வீடுகளுக்கும் விரைவாக குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us