/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாரதி அகாடமி மாணவர் நீட் தேர்வில் சிறப்பிடம்
/
பாரதி அகாடமி மாணவர் நீட் தேர்வில் சிறப்பிடம்
ADDED : ஜூன் 08, 2024 02:40 AM
பெருந்துறை,: பெருந்துறை அருகேயுள்ள விஜயமங்கலம், பாரதி அகாடமியில் பயின்று நீட்-2024 தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் சிறந்த மதிப்பெண் பெற்றனர்.
மாணவி கிப்ட்ஷியா கெரின், சுபிக்சா ஆகியோர், 720க்கு, 683 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தனர். மாணவி ஸ்ரீநிதி, 682 பெற்று இரண்டாமிடம், மாணவன் திருக்குமரன், 680 எடுத்து மூன்றாமிடம் பிடித்தனர். 650க்கு மேல், 13 மாணவர்கள், 600க்கு மேல், 25 பேர், 575 மதிப்பெண்களுக்கு மேல், 50 மாணவர்களும் பெற்றனர். பாரதி கல்வி நிறுவனத்தில் கீழ் இயங்கி வரும் சி.பி.எஸ்.சி., பள்ளி மாணவன் அஸ்வத் முதல் முயற்சியிலேயே, 644 மதிப்பெண் பெற்றார். நடப்பாண்டு, 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., சேர வாய்ப்புள்ளது. நீட் 2025-க்கான பயிற்சி வகுப்புகளுக்கு சேர்க்கை நடப்பதாக பள்ளி தலைவர் செந்தில்குமார் தெரிவித்தார். நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள், பயிற்சி அளித்த ஆசிரியர்களை, பள்ளி தாளாளர் மோகனம்பாள் பாராட்டினார்.