sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பவானி நகராட்சியை கண்டித்து துணை தலைவர் போராட்டம் குடியரசு தினவிழாவில் களேபரம்

/

பவானி நகராட்சியை கண்டித்து துணை தலைவர் போராட்டம் குடியரசு தினவிழாவில் களேபரம்

பவானி நகராட்சியை கண்டித்து துணை தலைவர் போராட்டம் குடியரசு தினவிழாவில் களேபரம்

பவானி நகராட்சியை கண்டித்து துணை தலைவர் போராட்டம் குடியரசு தினவிழாவில் களேபரம்


ADDED : ஜன 27, 2024 04:41 AM

Google News

ADDED : ஜன 27, 2024 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: பவானி நகராட்சி அலுவலகத்தில், குடியரசு தினவிழா தலைவர் சிந்துாரி தலைமையில் நேற்று நடந்தது. கமிஷனர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.

இதில் பங்கேற்க வந்த தி.மு.க., கூட்டணியை சேர்ந்த துணைத் தலைவர் மணி 'கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள், துணைத் தலைவரான தன்னை, நகராட்சி சார்பில் நடக்கும் விழாக்களுக்கு முறையாக அழைப்பு விடுப்பதில்லை. நகராட்சி நிர்வாகம் அவமதிக்கிறது' என்று கூறி, அலுவலக நுழைவாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவரிடம் பேசிய கமிஷனர், ''வரும் நாட்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும். நகராட்சி தலைவர் உத்தரவுப்படியே செயல்படுகிறேன். துணைத்தலைவர், கவுன்சிலர்களை அரசு விழாவுக்கு அழைப்பதில், தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை,'' என்றார். அதன்பின் மணி அங்கிருந்து சென்றார். இந்த களேபரத்தால், ௨௦ நிமிடம் தாமதமாக, குடியரசு தினவிழா தொடங்கி நடந்தது.






      Dinamalar
      Follow us