ADDED : ஜூன் 10, 2026 02:39 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:அந்தியூர்
யூனியன் தவிட்டுப்பாளையம், சின்னதம்பிபாளையம்,
கொண்டையம்பாளையம், வெள்ளாளபாளையம், வேம்பத்தி பகுதிகளில்,
15.21 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை கலெக்டர் கந்தசாமி
ஆய்வு செய்தார்.
பின் அந்தியூர் யூனியன் அலுவலகத்தில் ஆய்வு செய்தார்.
தவிட்டுப்பாளையம் பகுதியில், 5.90 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும்
புதிய பஞ்., அலுவலக கட்டட பணியை பார்வையிட்டு, தரமாக மேற்கொள்ள
யோசனை தெரிவித்தார். 1.70 லட்சம் ரூபாய் மதிப்பிலான சுழல் கலப்பையை,
விவசாயி ஒருவருக்கு வழங்கி, செயல்பாட்டை பார்வையிட்டார். தொடர்ந்து
பல்வேறு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார்.





