sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கடும் பனிப்பொழிவால் வரத்து குறைவு மல்லிகைப்பூ கிலோ ரூ.4,600க்கு விற்பனை

/

கடும் பனிப்பொழிவால் வரத்து குறைவு மல்லிகைப்பூ கிலோ ரூ.4,600க்கு விற்பனை

கடும் பனிப்பொழிவால் வரத்து குறைவு மல்லிகைப்பூ கிலோ ரூ.4,600க்கு விற்பனை

கடும் பனிப்பொழிவால் வரத்து குறைவு மல்லிகைப்பூ கிலோ ரூ.4,600க்கு விற்பனை


ADDED : ஜன 28, 2024 11:07 AM

Google News

ADDED : ஜன 28, 2024 11:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பு.புளியம்பட்டி: கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் வரத்து குறைந்ததாலும், முகூர்த்த சீசன் காரணமாக புன்செய் புளியம்பட்டி பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ, 4,600 ரூபாய்க்கு விற்பனையானது.

புன்செய்புளியம்பட்டி மற்றும் பவானிசாகர் சுற்றுவட்டார பகுதிகளில் மல்லி, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட மலர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு விளையும் பூக்கள் புன்செய் புளியம்பட்டி பூ மார்க்கெட்டில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப்பூ விளைச்சல் குறைந்துள்ளது. இதற்கிடையே தற்போது தமிழகம் மற்றும் கேரளாவில் முகூர்த்த சீசன் தொடங்கியுள்ளதால் மல்லிகை பூவின் தேவை அதிகரித்துள்ளது.நேற்று முன்தினம் கிலோ, 2,700 ரூபாய்க்கு விற்பனையான மல்லி கைப் பூ நேற்று விலை உயர்ந்து, 4,600 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல் முல்லை பூ கிலோ, 1,000 ரூபாய்க்கு விற்பனையானது, நேற்று கிலோ, 2,000 ரூபாய்க்கும், சம்பங்கி கிலோ, 50 ரூபாய்க்கும் விற்பனையானது.






      Dinamalar
      Follow us