sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சுகாதார செவிலியர் ஆர்ப்பாட்டம்

/

சுகாதார செவிலியர் ஆர்ப்பாட்டம்

சுகாதார செவிலியர் ஆர்ப்பாட்டம்

சுகாதார செவிலியர் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூன் 22, 2024 01:11 AM

Google News

ADDED : ஜூன் 22, 2024 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், பெருந்திரள் முறையீடு செய்தனர்.

மாவட்ட தலைவர் வெற்றிசெல்வி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வித்யாதேவி, பொருளாளர் தவ்லத் முன்னிலை வகித்தனர்.டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நிதியுதவி திட்டப்பணிகளை சமூக நலத்துறை, வருவாய் துறையிடம் ஒப்படைத்து, கிராம சுகாதார செவிலியர் மேற்கொள்ளும் தாய்சேய் நலப்பணி, தடுப்பூசி பணி, குடும்ப நலப்பணிகளை மட்டும் செயல்படுத்த உத்தரவிட வேண்டும். சுகாதார ஆய்வாளர் உட்பட செவிலியர் பணிக்கு இணையான பணிகளில், 5 ஆண்டுகளில் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. செவிலியர் பணியில், 29 ஆண்டுகள் நிறைவு செய்த பின்னரே பதவி உயர்வு வழங்குவதால், பெரும்பாலானவர்களுக்கு ஒரு பதவி உயர்வு கூட கிடைக்காமல் போகிறது. எனவே கிரேடு-2, 1 ஆகியவை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us