sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ரயில்வே காவிரி பாலத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

/

ரயில்வே காவிரி பாலத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

ரயில்வே காவிரி பாலத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

ரயில்வே காவிரி பாலத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு


ADDED : ஜன 26, 2024 10:12 AM

Google News

ADDED : ஜன 26, 2024 10:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: குடியரசு தினத்தை முன்னிட்டு ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் மற்றும் காவிரி பாலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் முகப்பு பகுதியில், ஈரோடு ரயில்வே இன்ஸ்பெக்டர் பிரியா சாய் ஸ்ரீ தலைமையில் எஸ்.ஐ., முருகானந்தம் மற்றும் போலீசார், பயணிகள் உடமைகளை சோதனை செய்தனர். ரயில்வே ஸ்டேஷனில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றி திரிந்தவர்களை பிடித்து விசாரித்தனர். ரயில்களிலும் ரோந்து மேற்கொண்டனர்.

இதேபோல் ஈரோடு ரயில்வே காவிரி பாலம் முன்புறம், துப்பாக்கி ஏந்திய ஈரோடு ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ரயில்வே போலீசாரின் சோதனை இன்று நள்ளிரவு வரை தொடரும் என போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us