sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கொப்பரை கொள்முதலில் முறைகேடு : நாபெட் மீது கள் இயக்கம் குற்றச்சாட்டு

/

கொப்பரை கொள்முதலில் முறைகேடு : நாபெட் மீது கள் இயக்கம் குற்றச்சாட்டு

கொப்பரை கொள்முதலில் முறைகேடு : நாபெட் மீது கள் இயக்கம் குற்றச்சாட்டு

கொப்பரை கொள்முதலில் முறைகேடு : நாபெட் மீது கள் இயக்கம் குற்றச்சாட்டு


ADDED : ஜன 27, 2024 03:55 PM

Google News

ADDED : ஜன 27, 2024 03:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : கொப்பரை கொள்முதலில் முறைகேடு நடந்து வருவதாக, நாபெட் நிறுவனம் மீது, கள் இயக்கம் குற்றம் சாட்டி உள்ளது.இதுபற்றி, தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி வெளியிட்ட அறிக்கை:வெளிச்சந்தையில் கொப்பரை தேங்காய் ஒரு கிலோ, 85 ரூபாய்க்கும் கீழ் உள்ள நிலையில், 108.60 ரூபாய்க்கு நாபெட் மூலம் அரசு கொள்முதல் செய்கிறது.

இதில் ஊழல், லஞ்சம், முறைகேடு நிறைந்துள்ளது. விவசாயிகள் இதில் பயனாளிகளாக இல்லை. மாறாக அதிகாரிகள், இடைத்தரகர்கள், வியாபாரிகள் மட்டுமே உள்ளனர்.கொள்முதல் செய்த கொப்பரையை, 65 ரூபாய்க்கு மீண்டும் நாபெட் நிறுவனம் கார்பரேட் நிறுவனங்களுக்கு விற்கிறது. இது முற்றிலும் ஏமாற்று வேலை. கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரை தேங்காயை எண்ணெயாக மதிப்பு கூட்டி உற்பத்தி செய்து, வெளிநாடுகளுக்கு விற்க, விவசாயிகள் தொடர்ந்து கோரி வருகின்றனர். ஆனால், கொப்பரை தேங்காயில் கூடுதல் சல்பர் இருப்பதால் ஏற்றுமதிக்கு உகந்ததாக இல்லை எனக்கூறி ஏற்றுமதி செய்ய மறுக்கிறது. அவ்வாறு ஏற்றுமதி செய்ய முடியாவிட்டால், கொப்பரை தேங்காய் கொள்முதல் திட்டத்தை கைவிடுவது நாட்டுக்கும், தென்னை விவசாயிகளுக்கும் நல்லதாகும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us