sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஸ்கூட்டர் வழங்கியதில் முறைகேடு: விசாரிக்க நாளை குழு வருகை

/

ஸ்கூட்டர் வழங்கியதில் முறைகேடு: விசாரிக்க நாளை குழு வருகை

ஸ்கூட்டர் வழங்கியதில் முறைகேடு: விசாரிக்க நாளை குழு வருகை

ஸ்கூட்டர் வழங்கியதில் முறைகேடு: விசாரிக்க நாளை குழு வருகை


ADDED : ஜூன் 04, 2025 01:05 AM

Google News

ADDED : ஜூன் 04, 2025 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம், இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் வழங்குவதில் நடைபெறும் முறைகேடுகள் அம்பலமாகி வருகின்றன. மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தினர், தகுதியற்றவர்களுக்கு ஸ்கூட்டர் வழங்கிவிட்டு, தகவல் கசிந்ததும், பறிமுதல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.

அவ்வகையில், தாராபுரத்தில் பெண் ரேஷன் ஊழியர், காங்கயத்தில் அங்கன்வாடி பணியாளருக்கு வழங்கப்பட்ட ஸ்கூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கருவம்பாளையத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி வெங்கடேஷ்வரனுக்கு, ஆர்.சி.,புக் வந்து நான்கு மாதமாகியும் ஸ்கூட்டர் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக அவர் குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்தபோதுதான், அந்த ஸ்கூட்டர், முறைகேடாக பொங்கலுாரை சேர்ந்த தகுதியற்ற மற்றொரு மாற்றுத்திறனாளிக்கு வழங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த ஸ்கூட்டரை பறிமுதல் செய்த மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தினர், வெங்கடேஸ்வரனிடம் ஒப்படைத்தனர்.

கே.வி.ஆர்., நகரை சேர்ந்த கனகராஜ் பெயரில் பதிவு செய்யப்பட்ட இலவச ஸ்கூட்டரை, ஆறுமாதமாக வழங்கவில்லை. கலெக்டரிடம் புகார் அளித்தபின்னர்தான், அந்த ஸ்கூட்டர், முறைகேடாக, உடுமலையை சேர்ந்த மற்றொரு மாற்றுத்திறனாளிக்கு வழங்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், ஸ்கூட்டர் வழங்குவதில் நடைபெற்றுவரும் முறைகேடுகள் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் சரவணன், கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் சென்னை சென்று, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு கூடுதல் செயலர் மதுமதியை நேற்றுமுன்தினம் சந்தித்தனர்; நாளிதழ் செய்திகளை சுட்டிக்காட்டி, திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், ஸ்கூட்டர் வழங்குவதில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி மனு அளித்தார். இதனால், ஸ்கூட்டர் வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளனவா என விசாரணை நடத்துவதற்காக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை துணை இயக்குனர் தலைமையிலான குழுவினர், நாளை திருப்பூர் வர உள்ளனர். இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை துணை இயக்குனர் ரவிந்திரநாத் சிங்கிடம் கேட்டபோது, ''புகாரின் அதனடிப்படையில் நேரடி விசாரணை நடத்துவதற்காக, எனது தலைமையிலான குழுவினர், வரும், 5ம் தேதி (நாளை) திருப்பூருக்கு வருகிறோம். விசாரணையில் முறைகேடுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us