ADDED : மே 12, 2025 03:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்: அந்தியூர் அருகே அண்ணாமடுவில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜே.சி.பி., உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டீசல், ஆயில், உதிரி பாகங்கள், புதிய வாகன விலை உயர்வு மற்றும் இன்ஸ்சூரன்ஸ் கட்டணம் அதிகரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்வதாக கூறினர். போராட்டத்தில், 60க்கும் மேற்-பட்ட ஜே.சி.பி., இயந்திரங்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், நாளை வரை வேலை நிறுத்தம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.

